Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் அதிமுகவிலிருந்து நீக்குகின்றேன் என்று வி.கே.சசிகலா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதிமுகவில் பதவி சண்டை உச்சமடைந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை சம்பவம் காரணமாக அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் அஇஅதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் வன்முறையைத் தூண்டியுள்ளனர். எனவே அவர்கள் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிடுகின்றேன்” என்று.சசிகலா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



Also Read: WhatsApp அழைப்புகள் அரசால் கண்காணிக்கப்படுகின்றது என்று பரவும் வதந்தி!
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் அதிமுகவிலிருந்து நீக்குகின்றேன் என்று சசிகலா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
வைரலாகும் நியூஸ்காடில் காணப்படும் எழுத்துரு (Font), டிசைன் ஆகியவற்றை காணும்போதே, அது போலியான நியூஸ்கார்ட் என்பதை யூகிக்க முடிகின்றது. இருப்பினும் பலர் இந்த நியூஸ்கார்டை உண்மை என நம்பி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதால் இதை முழுமையாக ஆய்வு செய்து தெளிவுப்படுத்த விரும்பினோம்.
சசிகலாவின் சமீபத்திய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றை காண முடிந்தது. இதில் சசிகலா ஈபிஎஸ் பொதுச் செயலாளரானது கேள்விக்குறியானது, ஓபிஎஸ்ஸை அதிமுகவில் நீக்கியது செல்லாது என்று பேசி இருந்ததை காண முடிந்தது. ஆனால் எந்த ஒரு இடத்திலும் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் அதிமுகவிலிருந்து நீக்குகின்றேன் என்று இச்சந்திப்பில் சசிகலா பேசி இருக்கவில்லை.
இதனையடுத்து புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், புதிய தலைமுறை இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என உறுதி செய்ய, புதிய தலைமுறையின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.
இதில் புதிய தலைமுறை இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. ஆகவே இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறை டிஜிட்டல் துறையின் தலைவர் கார்க்கியைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்ததில், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இதை நாங்கள் வெளியிடவில்லை” என்று தெளிவுப்படுத்தினார்.
Also Read: மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதா?
ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் அதிமுகவிலிருந்து நீக்குகின்றேன் என்று சசிகலா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Sources
YouTube Video from News 18 Tamil, upoaded on 11/07/2022
Phone conversation with Karki, Puthiya Thalaimurai, on 13/07/2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 20, 2024
Vijayalakshmi Balasubramaniyan
April 30, 2024
Ramkumar Kaliamurthy
June 30, 2023