Fact Check
பிரியங்கா காந்தி ஆறுதல் கூறியவர் காங்கிரஸ் கட்சிக்காரரா?
பிரியங்கா காந்தி அவர்கள் ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டக் குடும்பத்துக்கு நேரில் சென்று, கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.
ஆனால் தற்போது பிரியங்கா காந்தி அவர்கள் கட்டியணைத்து ஆறுதல் கூறிய நபர் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர் அல்ல. அந்நபர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர் என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

Fact Check/Verification
சமீபத்தில் இந்தியாவையே உலுக்கிய சம்பவம் ஹத்ராஸ் சம்பவம். உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் ஹத்ராஸ் எனும் கிராமத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணை நான்கு மேல்சாதியைச் சார்ந்தவர்கள் பாலியல் வன்கொடுமைச் செய்து வீசி எறிந்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அப்பெண், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதன்பின் இவ்விஷயம் இந்திய அளவில் பெரும் போராட்டங்களுக்கும் விவாதங்களுக்கும் வித்திட்டது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும் போராட்டங்களுக்குப் பிறகு ராஜீவ் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பிரியங்கா காந்தியைக் கட்டியணைத்து அழுதார். இப்படம் இந்திய அளவில் டிரெண்டிங்கானது.

இப்போது சமூக வலைத் தளங்களில் சிலர், பிரியங்கா காந்தியைக் கட்டி அணைத்திருப்பவர் பாதிக்கப்பட்டக் குடும்பத்தைச் சார்ந்தவர் அல்ல, அவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர் என்று ஒரு தகவலைப் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
பிரியங்கா காந்தி குறித்துப் பரவும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவல் குறித்துத் தீவிரமாக ஆராய்ந்தோம். அவ்வாறு ஆராய்ந்ததில் பரப்பப்படும் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்று நம்மால் உணர முடிந்தது.
ஏனெனில் பரவும் இச்செய்தியில், வைரலானப் புகைப்படத்தில் பிரியங்கா காந்தியைக் கட்டியணைத்தப்படி இருப்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணி அல்ல, அவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர் என்று கூறுகின்றனர்.
ஆனால் உண்மையில் வைரலான அப்புகைப்படத்தில் பிரியங்கா காந்தியுடன் இருப்பவர், ஹத்ராஸ் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணியும் இல்லை, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவரும் இல்லை. அவர் பாதிக்கப்பட்டப் பெண்ணின் தாயார் ஆவார்.
நமது ஆய்வில், பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்களைச் சந்தித்த நிகழ்வுக் குறித்த வீடியோ ஒன்றைக் காண முடிந்தது.
இந்த வீடியோவை ANI News வெளியிட்டிருந்தது. அவ்வீடியோவில், பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மாவைக் கட்டியணைத்தப்படி இருக்கும் ஒரு காட்சியையும் நம்மால் காண முடிந்தது.
அவ்வீடியோ உங்கள் பார்வைக்காக:
Conclusion
நம் விரிவான ஆய்வுக்குப்பின், பிரியங்கா காந்தி கட்டியணைத்து ஆறுதல் கூறியது காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர் அல்ல என்பதும், அவர் ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் என்பதும் தெளிவாகியுள்ளது.
Result: False
Our Sources
Twitter Profile: https://twitter.com/ven74kani/status/1314990679253225473
Twitter Profile: https://twitter.com/YeskayOfficial/status/1315121452866134019
Facebook Profile: https://www.facebook.com/fervidindian/photos/a.101731014968283/143902984084419/
ANI News: https://www.youtube.com/watch?v=e9R0O8_8D4I
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)