Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மாவட்ட எல்லைகள், தமிழகத்தில் மூடப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுமைக்கும் பல்கிப் பெருகிய கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களில் சற்றே குறைந்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் மீண்டும் கொரோனா பாதிப்பு 1000 ஐ நெருங்கி உள்ளது.
இச்சூழ்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக நாளை முதல் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளது போல நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
மாவட்ட எல்லைகள் வருகின்ற 30ம் தேதி வரை மூடப்படுகிறது என்பதாகப் பரவும் புகைப்படச் செய்தியில், புதியதலைமுறையின் நியூஸ் கார்டு பயன்படுத்தப்பட்டிருப்பதை அடுத்து அதனை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்து பார்த்தோம்.
அதன் முடிவில், குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டு பரவுவதைத் தொடர்ந்து அதற்கான மறுப்பினை புதியதலைமுறை தனது வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது தெரிய வந்தது.

Link: https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/2142414829248747
அதன் அடிப்படையில், நாளை முதல் மாவட்ட எல்லைகள் மூடப்படுகிறது என்பதாக உலவும் நியூஸ் கார்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான புதியதலைமுறையின் செய்தியில் இருந்து ஸ்க்ரீன் ஷாட் அடிக்கப்பட்டு தற்போது புதிய செய்தி போல உலாவ விடப்பட்டுள்ளது நமக்குத் தெரிய வந்தது.

மாவட்ட எல்லைகள் வருகின்ற 30 ஆம் தேதி வரை மூடப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புதியதலைமுறை நியூஸின் புகைப்படச் செய்தி, சென்ற வருடம் வந்த பழைய செய்தியாகும். இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Puthiyathalaimurai: https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/2142414829248747
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 20, 2024
Vijayalakshmi Balasubramaniyan
April 30, 2024
Vijayalakshmi Balasubramaniyan
December 22, 2023