Vijayalakshmi Balasubramaniyan
-

பிரதமர் நரேந்திர மோடி மின்னணு வாக்கு இயந்திரத்தை வணங்கியதாக வதந்தி!
பிரதமர் நரேந்திர மோடி, மின்னணு வாக்கு இயந்திரம் ஒன்றிற்கு மாலை அணிவித்து, அதனை வணங்குவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact check/Verification: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும்கட்சி பாஜகவின் மீது அடிக்கடி, மின்னணு வாக்கு இயந்திரத்தினை தவறாக உபயோகித்தே வெற்றி பெறுகின்றனர் என்கிற குற்றச்சாட்டுகள் எழுவது வழக்கம். கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் இருந்தே இக்குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. இவை நிரூபணமற்றவை என்றாலும் கூட, சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த…
-

வேல் யாத்திரைக்கு அனுமதி கிடைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்றாரா அர்ஜூன் சம்பத்?
’வேல் யாத்திரை’ என்கிற பெயரில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான எல்.முருகன் தலைமையில் நடைபெறும் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்படாவிட்டால் தீக்குளிப்பேன் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்ததாக செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது. Fact check/Verification: பாஜக தமிழகத் தலைவர் வேல்முருகன், வேல் யாத்திரை என்ற ஒன்றை முன்னெடுத்து நடத்தி வருகிறார். நவம்பர் 6-ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 6ம் தேதி வரையில் ஒரு மாத காலம் வேல்…
-

ராமேஸ்வரம் கோயில் நகைகள் எடை குறைவுக்கு ரூ.5000 முதல் ஒரு லட்சம் வரைதான் அபராதம்?
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நகைகளின் எடை குறைந்திருந்த விவகாரம் குறித்த தவறான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact checking/Verification: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சார்த்தப்படும் நகைகள் அர்ச்சகர்களின் பொறுப்பில் இருக்கும் நிலையில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு நகை மதிப்பீடு செய்யும் பணி கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில், நகைகளின் எடை குறைவு விவகாரத்தில் அர்ச்சகர்களிடமிருந்து 5000 ரூபாய் முதல் ஒரு லட்சம் வரையில் மட்டும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ‘இதுதான் மனுதர்மம்…
-

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்க விண்ணப்பம்?
நடிகர் விஜய், இன்று தனிக்கட்சி துவங்குவதற்காக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக சில ஊடகங்கள் ப்ரேக்கிங் நியூஸ் வெளியிட்டிருந்தன. இதனையடுத்து இச்செய்தி, சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல வைரலானது. Fact Check/ Verification: தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகர் விஜய். இளையதளபதி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவரை, சில வருடங்களாகவே அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில்தான், இன்று நடிகர் விஜய் அரசியல் பிரவேசம்; தனிக்கட்சியைப்…
-

காவல்நிலையத்தில் தாக்கப்பட்டாரா அர்னாப் கோஸ்வாமி?
மகாராஷ்டிர காவல்துறையினரால் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி, பொறியாளர் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக எழுப்பப்பட்டுள்ள புகார் ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் காவல்நிலையத்தில் துன்புறுத்தப்படுவதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact check/Verification: மும்பையில் 52 வயதான கட்டிட வடிவமைப்பு பொறியாளர் அன்வே நாயக் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது தற்கொலை கடிதத்தை ஆதாரமாக வைத்து ரைய்காட் காவல்துறையினர், ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்தனர். இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமியை காவல்துறையினர் தலைகீழாக…
-

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ‘மோடி’ கோஷமா?
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், அந்நாட்டு எம்.பிக்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கோஷமாக எழுப்பியதாக சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. அதைத்தொடர்ந்து, அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. Fact check/ Verification: பாகிஸ்தான் நாடாளுமன்றக் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கார்ட்டூன் விவகாரத்தில் பிரான்ஸ் நாட்டில் ஆசிரியர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தைக் குறிப்பிட்டு விவாதம் நடைபெற்ற நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி இடையில் பேசமுற்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘மோடி…
-

கொரோனாவை அழிக்குமாஅமைச்சர் செல்லூர் ராஜூ கழுத்தில் தொங்கும் அட்டை?
தமிழக கூட்டுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கழுத்தில் வைரஸ் தடுப்பு அட்டை அணிந்திருப்பது, கோவிட் 19ஐ உண்டாக்கும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக என்ற செய்தி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் கேலியாக வைரலாகி வருகிறது. Fact check/Verification: கொரோனா பாதிப்பில் இருந்து அமைச்சர் செல்லூர் ராஜூ சமீபத்தில் மீண்டு வந்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய பாதுகாப்பு குறித்து அவர் மேலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அதன் ஒருபடியாக, அமைச்சர் எங்கு சென்றாலும் அவரது கழுத்தில் அடையாள அட்டை போன்ற ஒரு…