இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா இந்தியா டுடே?
இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட போலி புகைப்படமாகும்.

செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்பட்டதாக பரவும் செய்தி உண்மையா?
செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்பட்டதாகப் பரவும் செய்தி போலியானதாகும்.

மின்சார கட்டணத்தை உயர்த்தவிருக்கின்றதா திமுக அரசு?
மின்சார கட்டணத்தை திமுக அரசு உயர்த்தவிருப்பதாக பரவும் தகவல் தவறானதாகும். 2022 ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்ட மின் உயர்வு கட்டண பட்டியலை வைத்து இத்தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.

சீரடி சாய்பாபா டிரஸ்ட் முஸ்லீம்களின் ஹஜ் யாத்திரைக்கு ₹35 கோடி நன்கொடையாக அளித்ததா?
சீரடி சாய்பாபா டிரஸ்ட் முஸ்லீம்களின் ஹஜ் யாத்திரைக்கு ₹35 கோடி நன்கொடையாக அளித்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

மலபார் ஜுவல்லரி இஸ்லாமிய மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை அளித்ததா?
மலபார் ஜுவல்லரி இஸ்லாமிய மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை அளித்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)