இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்றாரா பொன்முடி?
வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று அமைச்சர் பொன்முடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்துக் கொலை என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
வானதி சீனிவாசன் எம்எல்ஏ அலுவலகத்தில் இளைஞர் அடித்துக் கொலை என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

சில்லறைகள் பற்றி கவலையில்லை என்றாரா அண்ணாமலை?
சில்லறைகள் பற்றி கவலையில்லை என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

திமுக தற்போதைய ஆட்சியில் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வீல்சேர் என்று பரவும் பழைய புகைப்படம்!
திமுக தற்போதைய ஆட்சியில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வீல்சேர் என்று பரவும் புகைப்படம் பழைய படமாகும்.

மதப்பிரச்சாரம் செய்த கிறித்தவரை இந்துத்வா கும்பல் தாக்கியதா?
மதப்பிரச்சாரம் செய்த கிறித்தவரை இந்துத்வா கும்பல் கொடூரமாக தாக்கியதாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)